மாணிக்கவாசகர் அருளிய திருவாசகம்
29. திருக்கழுக்குன்றப் பதிகம்
திருக்கழுக்குன்றத்தில் அருளியது
சற்குரு தரிசனம்
எழுசீர் ஆசிரிய விருத்தம்
பிணக்கி லாதபெ ருந்து றைப்பெரு
    மான்உன் நாமங்கள் பேசுவோர்க்கு
இணக்கி லாததோர் இன்ப மேவருந்
    துன்ப மேதுடைத் தெம்பிரான்
உணக்கி லாததோர் வித்து மேல்விளை
    யாமல் என்வினை ஒத்தபின்
கணக்கி லாத்திருக்கோலம் நீவந்து
    காட்டி னாய்கழுக் குன்றிலே.
1
பிட்டு நேர்பட மண்சு மந்த
    பெருந்து றைப்பெரும் பித்தனே
சட்ட நேர்பட வந்தி லாத
    சழக்க னேன்உனைச் சார்ந்திலேன்
சிட்ட னேசிவ லோக னேசிறு
    நாயி னுங்கடை யாயவெங்
கட்ட னேனையும் ஆட்கொள் வான்வந்து
    காட்டி னாய்கழுக் குன்றிலே.
2
மலங்கி னேன்கண்ணின் நீரை மாற்றி
    மலங்கெ டுத்தபெ ருந்துறை
விலங்கி னேன்வினைக் கேட னேன்இனி
    மேல்வி ளைவத றிந்திலேன்
இலங்கு கின்றநின் சேவடிகள்
    இரண்டும் வைப்பிட மின்றியே
கலங்கி னேன்கலங் காம லேவந்து
    காட்டி னாய்கழுக் குன்றிலே.
3
பூணொ ணாததொ ரன்பு பூண்டு
    பொருந்தி நாள்தொறும் போற்றவும்
நாணொ னாததோர் நாணம் எய்தி
    நடுக்க டலுள்அ ழுந்திநான்
பேணொ ணாதபெ ருந்து றைப்பெருந்
    தோணி பற்றி யுகைத்தலும்
காணொ ணாத்திருக் கோலம் நீவந்து
    காட்டி னாய்கழுக் குன்றிலே.
4
கோல மேனிவ ராக மேகுண
    மாம்பெ ருந்துறைக் கொண்டலே
சீல மேதும் அறிந்தி லாதஎன்
    சிந்தை வைத்த சிகாமணி
ஞான மேகரி யாக நானுனை
    நச்சி நச்சிட வந்திடும்
காலமே உனைஒதநீ வந்து காட்டி
    காட்டி னாய்கழுக் குன்றிலே.
5
பேதம் இல்ல தொர்கற் பளித்த
    பெருந் துறைப்பெரு வெள்ளமே
ஏதமே பலபேச நீஎனை ஏதி
    லார்முனம் என்செய்தாய்
சாதல் சாதல்பொல் லாமை யற்ற
    தனிச்ச ரண்சர ணாமெனக்
காத லால்உனை ஓத நீவந்து
    காட்டி னாய்கழுக் குன்றிலே.
6
இயக்கி மாரறு பத்து நால்வரை
    எண்குணம் செய்த ஈசனே
மயக்க மாயதொர் மும்ம லப்பழ
    வல்வி னைக்குள் அழுந்தவும்
துயக்க றுத்தெனை ஆண்டு கொண்டுநின்
    தூய்ம லர்க்கழல் தந்தெனைக்
கயக்க வைத்தடி யார்மு னேவந்து
    காட்டி னாய்கழுக் குன்றிலே.
7
திருச்சிற்றம்பலம்

மேலே செல்க

முன்பக்கம்

   
 
© 2006 www.templeyatra.com - All Rights Reserved.
Designed by www.templeyatra.com